தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் மேலும்  2 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 332 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், இன்று கோவை மாவடத்தை சேர்ந்த ஒருவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதில் தலா ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை.

மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதைபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story