அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

நீடாமங்கலத்திலிருந்து ராஜபாளையம், நெல்லைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி ைவக்கப்பட்டது

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை மற்றும் அசேஷம், தெற்குநத்தம், எடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 1000 டன் நெல் அரவைக்காக ராஜபாளையத்துக்கும் திருநெல்வேலிக்கு ஆயிரம் டன் நெல்லும் அனுப்பி வைக்கப்பட்டது.

1 More update

Next Story