தட்டச்சு தேர்வு தொடங்கியது


தட்டச்சு தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 25 Feb 2023 7:44 PM GMT (Updated: 25 Feb 2023 8:06 PM GMT)

தட்டச்சு தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்

தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 120 மாணவ-மாணவிகளும், சீனியர் கிரேடில் 61 பேரும், ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 249 பேரும், சீனியர் கிரேடில் 100 பேரும் என மொத்தம் 530 பேர் பங்கேற்றுள்ளனர். முதல்நாள் ஜூனியர் கிரேடில் 6 குழுக்கள், சீனியர் கிரேடில் 4 குழுக்கள் என மொத்தம் 10 குழுக்களுக்கு தேர்வு நடைபெற்றது. அறை கண்காணிப்பாளர்கள், தட்டச்சு தேர்வை கண்காணித்தனர். 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 96 மாணவ-மாணவிகளும், சீனியர் கிரேடில் 84 பேரும், ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 186 பேரும், சீனியர் கிரேடில் 118 பேரும் என மொத்தம் 484 பேர் தட்டச்சு தேர்வில் பங்கேற்க உள்ளனர்.


Next Story