காயத்தின் வலியை தாங்க முடியாமல் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


காயத்தின் வலியை தாங்க முடியாமல் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
x

காயத்தின் வலியை தாங்க முடியாமல் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி செல்லாயி(வயது 78). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செல்லாயி தானாக கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது. காயத்தின் வலி தாங்க முடியாததால் செல்லாயி நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் தனக்கு தானே ஊற்றி கொண்டு தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் அங்கும், இங்கும் ஓடினார். பின்னர் பலத்த தீக்காயமடைந்த செல்லாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் செல்லாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story