பராமரிப்பின்றி கிடக்கும் பயணிகள் நிழற்குடை


பராமரிப்பின்றி கிடக்கும் பயணிகள் நிழற்குடை
x

பராமரிப்பின்றி கிடக்கும் பயணிகள் நிழற்குடை

திருவாரூர்

முத்துப்பேட்டை தாலுகா நொச்சியூர் கிராமத்தில் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இங்கு பயணிகள் நலன்கருதி நிழற்குடை கட்டப்பட்டது. இதனால் அந்தபகுதி மக்கள் பயன்அடைந்து வந்தனர். தற்போது இந்த பயணிகள் நிழற்குைட சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் உள்ள டைல்ஸ் மற்றும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ேமலும் கட்டிடம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நொச்சியூர் கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் பயணிகள் நிழற்குடையை சீரமைத்்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story