அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம்; 5 பேர் கைது

சாத்தான்குளத்தில் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு திட்டத்திற்காக வைப்புத்தொகை ரூ.8,110 நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த வைப்புத்தொகை கூடுதலாக உள்ளதாகவும், இதனை ரத்து செய்யக்கோரியும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி எட்வர்ட் ராஜதுரை தலைமையில் உண்ணாவிரதம் இருந்த 5 பேரை சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





