அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

பாபநாசத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் புதிய பஸ் நிலையம் தபால் நிலையம் எதிரே உள்ள ெரயில் நிலையம் சாலையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாபநாசம் கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story