அடையாளம் தெரியாத ஆண் பிணம்
அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எருமைப்பட்டி ஊராட்சியில் உள்ள வள்ளிக்கோன்பட்டி பெரிய கண்ணுகுடி கண்மாய் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஒயர் கம்பியால் தூக்கிட்ட நிலையில் ஒருவர் இருப்பதாக எஸ்.எஸ். கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்ததை அடுத்து போலீசார் விரைந்து சென்று அழுகிய நிலையில் இருந்த தூக்கில் தொங்கிய ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த நபர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story