அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டது.

கரூர்

கரூர்-வாங்கல் ரெயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story