தூய்மை பணியாளர்களுக்கு சீருடை


தூய்மை பணியாளர்களுக்கு சீருடை
x

நெல்லையில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொது சுகாதார பிரிவு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி மாநகராட்சியில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். இதில் சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story