கமுதி யூனியன் கூட்டம்


கமுதி யூனியன் கூட்டம்
x

கமுதி யூனியன் கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி யூனியன் கூட்டம் அதன் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை ராஜகோபாலன் கிராம ஊராட்சி ஆகியோர் முன்னிலை வைத்தனர். அபிராமத்தை அடுத்துள்ள நியாய விலை கடையை சுற்றி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அந்தபகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது எனவே நியாய விலை கடையை சுற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். சாமிபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணறு குளியல் தொட்டி, அலங்கார கற்கள் சாலை இவை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்பட வில்லை. சேர்ந்த கோட்டை கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வேளாண்மை துறை, மின்சார வாரியத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த புகார்களை கூட்டத்தில் தெரிவித்தும் பயன் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வரும் காலங்களில் அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளிகுளம் கிராமத்தில் மயானத்தை சுற்றி உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற சாலை வசதி செய்து தர வேண்டும். தலைவர் தமிழ்செல்வி போஸ், போதிய நிதி இல்லாததால் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்வுகாண இயலவில்லை. இருப்பினும் ஓரளவு திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய பொது நிதி, மாவட்ட ஊராட்சி முகாம் நிதி, ஆணையத்தில் இருந்து வழங்கப்பட வேண்டிய நிதி அனைத்தையும் முறையாக ஊராட்சி ஒன்றியத்திற்கு வரவில்லை. எனவே நிதி நிலைமை சீரான பின்னர் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.


Next Story