நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்
x

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.

நாமக்கல்


மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் வழியாக மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.

இதையொட்டி நாமக்கல் நகருக்குள் வந்த அவர், ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அவர் நரசிம்மசாமி கோவிலிலும் சாமிதரிசனம் செய்தார்.

அவருடன் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், நகர தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்து இருந்தனர்.


Next Story