துப்புரவு பணியாளர்களுடன் உணவருந்திய மத்திய மந்திரி எல்.முருகன்


மத்திய மந்திரி எல்.முருகன் 3 நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றார்.

சென்னை:

மத்திய மந்திரி எல்.முருகன் நிகோபாரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தை பார்வையிட்டார். அப்போது ஆழ்கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை கண்டறியும் படகை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஹாவ்லாக், கார் நிகோபார் தீவுகளில் 100 வாட் திறன் கொண்ட 2 பண்பலை வானொலி ஒலிபரப்பு நிலையம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதன்பின்பு போர்ட் பிளேர் புருஷா பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் துப்புரவு பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறைச்சாலையை பார்வையிட்டார்.


Next Story