வடசென்னை அனல் மின் நிலையத்தில் 3-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்


வடசென்னை அனல் மின் நிலையத்தில் 3-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
x

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டின் 3-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

சென்னை,

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டின் 3-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் தலா 3 அலகுகளில் 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 25-ந்தேதி முதல் யூனிட்டின் 3-வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு 3-வது அலகில் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.


Next Story