திருமணமாகாத விரக்தி: வக்கீல் விஷம் குடித்து தற்கொலை

கரூரில் திருமணமாகாத விரக்தியில் வக்கீல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 41). வக்கீல். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராமலிங்கம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.இதைக்கண்ட அவரது உறவினர்கள் ராமலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணமாகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






