யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 288 பேர் எழுதினர்


யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 288 பேர் எழுதினர்
x

யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 288 போ் எழுதினர். 181 பேர் தேர்வு எழுதவில்லை.

பெரம்பலூர்

`நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தயாராகும் தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புடன் தலா ரூ.7,500 வீதம் 10 மாதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் பயன்பெற பெரம்பலூர் மாவட்டத்தில் 469 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான தேர்வு பெரம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது.பெரம்பலூரில் நடந்த தேர்வினை 288 பேர் எழுதினர். 181 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வினை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.


Next Story