மேலத்தானியம் கரைக்கருப்பர் கோவிலில் வருடாபிஷேகம்


மேலத்தானியம் கரைக்கருப்பர் கோவிலில் வருடாபிஷேகம்
x

மேலத்தானியம் கரைக்கருப்பர் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் கரைக்கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வருடாபிஷேகத்தையொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மேலும் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை கோவனூர் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி வருடாபிஷேகம் செய்து வைத்தனர். இதையடுத்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story