டாக்டருக்கு பிடிவாரண்டு

டாக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
திருமங்கலம்.
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் வசந்த லட்சுமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனை செய்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் வழக்கு திருமங்கலம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க டாக்டருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. அவர் ஆஜராகாததால் பிடிவாரன்ட் மூலம்ஆஜர்படுத்த திருமங்கலம் நகர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





