வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு


வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

விழுப்புரம் அருகே 45 அடி உயரம் கொண்ட வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தேவதானம் பேட்டையில் புதிதாக 45 அடி உயர வீர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு 11-ம் தேதி கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 12-ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கோ பூஜை, 1008 விஷ்ணு சஹஸ்ரநாமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து இன்று 9 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டு 45 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story