வேங்கைவயல் வழக்கு: 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி


வேங்கைவயல் வழக்கு: 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி
x

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த 6 பேரில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்பட்ட நிலையில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.


Next Story