வேன்மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


வேன்மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேன்மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வேல்முருகன். இவரது மகன்சுரேந்தர் (வயது 23). இவர் கோவை தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையத்தில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சுரேந்தரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story