108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம் நடந்தது.
சாயல்குடி,
கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் உள்ள ஏகநாதர் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஏகநாதருக்கு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. தொடர்ந்து கும்பம் அலங்காரம், புறப்பாடு செய்து விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் சாமிக்கு அபிஷேக அலங்காரம், பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்கள் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஏகநாதருக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





