பொங்கல் விழா


பொங்கல் விழா
x

முதுகுளத்தூரில் பொங்கல் விழா நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் மறவர் சங்கம் சார்பில் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத துறை பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி பொங்கல் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பால் மற்றும் பன்னீர் உள்பட 18 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடை பெற்றது. மேலும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொங்கல் விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கயிறு இழுத்தல், கோலப்பொட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பட்டினை கடலாடி முளைக்கட்டு திண்ணை மறவர் சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story