கிராம நிர்வாக அலுவலர் திடீர் சாவு


கிராம நிர்வாக அலுவலர் திடீர் சாவு
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:46 PM GMT)

கடையம் அருகே கிராம நிர்வாக அலுவலர் திடீரென இறந்தார்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் நவீன் (வயது 38). இவர் சேரன்மாதேவி அருகே கிரியம்மாள்புரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் அவர் கழிவறைக்கு சென்று நீண்டநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. உடனடியாக அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது அங்கு அவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் திடீர் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story