சிறப்பு கிராம சபை கூட்டம்


சிறப்பு கிராம சபை கூட்டம்
x

குடவாசல் 52 புதுக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது

திருவாரூர்

குடவாசல்;

குடவாசல் ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட சமூக அறிக்கை சமர்ப்பிக்கும் கிராம சபை கூட்டம் நடந்தது.52 புதுக்குடி ஊராட்சி கிராம சபை கூட்டம் நரசிங்கம்பேட்டை பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட மூத்த பயனாளி ‌வேம்பு தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சமூகத் தணிக்கை குழு அலுவலர் அய்யப்பன் பண்ணைக்குட்டை வெட்டுதல், குளம் தூர்வாருதல், வீடு கட்டுதல், புதியகட்டிட வசதி ஏற்படுத்துதல், மரக்கன்று நடுதல் போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ள அங்கீகாரம் அளித்தல் குறித்து எடுத்து கூறப்பட்டது. 52 புதுக்குடி ஊராட்சியில் மட்டும் இந்த ஆண்டில் ரூ.78 லட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி துணைதலைவர் விக்னேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.


Next Story