கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x

இடைகால் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

கலிதீர்த்தான்பட்டி, ஆழ்வான்துலுக்கப்பட்டி அணைந்தநாடார்பட்டி, பனையங்குறிச்சி ஆகிய பகுதிகளை சுற்றிலும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளால் வீடுகள் குலுங்குவதாக கூறியும், விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறியும் நேற்று முன்தினம் அப்பகுதியினர் இடைகால் அருகே உள்ள அணைந்தநாடார்பட்டி பகுதியில் பேனர் வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திடீரென அங்கு ஏராளமானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்பை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story