கள்ளர் பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


கள்ளர் பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x

வத்தலக்குண்டு அருகே கள்ளர் பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே உள்ள கோம்பைப்பட்டி ஊராட்சி எம்.குரும்ப்பட்டியில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை தங்களது குழந்தைகளுடன் முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story