வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா


வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
x

வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

ராணிப்பேட்டை

வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செல்வ விநாயகர் விக்ரகத்திற்கு பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற்றது. ஜலகுரு பழனி சுவாமிகள் தத்வார்ச்சனை, தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கோவில் திருப்பணிக்கு காணிக்கை மற்றும் கட்டிட பொருட்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி அறங்காவலர் வாசுதேவ சுவாமிகள் செய்திருந்தார்.


Next Story