போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 207 பேர் மீது வழக்குப்பதிவு;ரூ.56 ஆயிரம் அபராதம் வசூல்


போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 207 பேர் மீது வழக்குப்பதிவு;ரூ.56 ஆயிரம் அபராதம் வசூல்
x

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 207 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாநகரில் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 133 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் மதுபோதையில் வாகனம் இயக்கிய 8 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிய 4 பேர் மீதும் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 207 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் மதுபோதையிலும், செல்போன் பேசியபடியும் வாகனம் ஓட்டிச்சென்ற 4 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.


Related Tags :
Next Story