விளாத்திகுளம், புதூர் பகுதியில்ரூ.1.83 கோடியில் அரசு திட்ட பணிகள் தொடக்கம்


விளாத்திகுளம், புதூர் பகுதியில்ரூ.1.83 கோடியில் அரசு திட்ட பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 9 Jun 2023 6:45 PM GMT)

விளாத்திகுளம், புதூர் பகுதியில் ரூ.1.83 கோடியில் அரசு திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் யூனியன் வைப்பார் ஊராட்சி வைப்பார், கலைஞானபுரம், கல்லூரணி, துலுக்கன்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ரூ.1.02 கோடி மதிப்பில் 850 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், வைப்பார் சாலையில் இருந்து கல்லூரணி சாலை வரை முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் ஒரு கி.மீ. தூரம் சாலை அமைக்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து புதூர் அருகே ரெட்டியப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5½ லட்ச்தில் கட்டப்பட்ட பஸ் நிறுத்த கூட கட்டிடத்தை எம்.எல்.ஏ திறந்து வைத்தார். மேலும் நாகலாபுரம் அரசு கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சாலையில் இருந்து ஓடையை கடந்து செல்வதற்கு ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் கட்டப்பட உள்ள பாலத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் எம்.வேடப்பட்டி முதல் புதுப்பட்டி அச்சங்குளம் வரை முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2 கி.மீ. தூரத்துக்கு ரூ.77 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் அன்பு ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், முத்துக்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story