தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு


தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
x

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

மேற்படிப்பை தொடர

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசாணை எண்.34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (எஸ்.1) துறை, நாள்.30.3.2022 -ல் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இணையான சான்றிதழ்

இணையான சான்றிதழ் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள Nodal தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

அடுத்த மாதம் 3-ந்தேதிக்குள்

விண்ணப்பத்தை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10-ம் வகுப்பு / 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இந்த துறையால் வழங்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் உரிய கல்விச்சான்றிதழ்களுடன் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடுத்த மாதம் 3-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story