பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் போட்டி


பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் போட்டி
x

வேப்பூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர்

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி வேப்பூர் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வாலிபால் போட்டி சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டியில் வேப்பூர் குறுவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர்.


Next Story