சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்


சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்
x

பள்ளிபாளையம் சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி தலைவர் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் குலோத்துங்கனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில், குமாரபாளையம் கங்கை வீதி முதல் ஓடக்காடு வரை உள்ள சாலை வலதுபுறம் உள்ள சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் இல்லை. அதன் காரணமாக மண் அரிப்பு உருவாகி வாகன விபத்து ஏற்படும் நிலை உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்யும் நிலை உள்ளதால், தடுப்பு சுவர் கட்டி மேலும் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது கவுன்சிலர் தர்மராஜன், ராஜ், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story