பகுதி சபை கூட்டம்


பகுதி சபை கூட்டம்
x

திருத்துறைப்பூண்டி நகராட்சி 3-வது வார்டில் பகுதி சபை கூட்டம் நடந்தது

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி நகராட்சி 3-வது வார்டு அய்யனார் ஆலயத்தில் பகுதி சபை கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் அப்துல்ஹாரீஷ், நகர் மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில் குமார், வார்டு பொறுப்பாளர்கள் செந்தில், சங்கர், ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குட்ஷெட் தெருவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். பட்டா இல்லாத காரணத்தால் உடனே குடிநீர் இணைப்பு பெற முடியாததால் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதிகள் செய்து தர வேண்டும். அகமுடையார் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். குட்செட் தெருவில் உள்ள குளத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். மின் கம்பங்கள் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்போது நகர சபை தலைவா் கவிதாபாண்டியன் பொதுமக்களின் கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

1 More update

Next Story