நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x

ஐகோர்ட்டு உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.

திருப்பத்தூர்

ஐகோர்ட்டு உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வருடத்தில் 4 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது 6 கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தில் அனைத்து வாக்காளர், பொதுமக்கள் கலந்து கொண்டு பஞ்சாயத்துகளில் உள்ள குறைகளை விவாதித்து தீர்வு காண வேண்டும்.

பஞ்சாயத்துகளில் முக்கிய பணியாக கருதப்படுவது சாலை, குடிநீர் வசதி, வீட்டு மனை பட்டா, கடன் உதவி போன்றவை ஆகும். மேலும் ஐகோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைக்காலங்களில் வீடுகளில் நீர் போகாதவாறு பாதுகாக்க வேண்டும்.

தகவல் பலகை

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், திட்டங்கள் குறித்தும், நடைபெறுகிற பணிகள் குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும், பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் சத்யா, ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ, ஒன்றியக்குழு உறுப்பினர் உமா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராம்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story