திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது


திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 12 Aug 2023 7:23 AM GMT)

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

திருவாரூர்

நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. இதனால் நன்னிலம், மாப்பிள்ளைகுப்பம், திருவாஞ்சியம் ஆகிய பகுதிகளில் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. மேலும் மழைநீர் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்குள் புகுந்து நடைவாகன மண்டபத்தில் தேங்கி நின்றது. இந்த மழையால் குறுவை பயிர் சாகுபடிசெய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story