தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்


தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்
x

நீர்வரத்து அதிகரித்ததால் பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது

தேனி

போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிள்ளையார் தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்து தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story