தூத்துக்குடி மாநகராட்சியில் வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம்
தூத்துக்குடி மாநகராட்சியில் வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்புக்கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இந்த தகவலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story