போடி அருகே கடும் உறைபனியால் ஐஸ்கட்டியாக மாறிய தண்ணீர்...!


போடி அருகே கடும் உறைபனியால் ஐஸ்கட்டியாக மாறிய தண்ணீர்...!
x

போடி அருகில் உள்ள மூணாறு செல்லும் சாலையில் சின்னகல்லாறு பகுதியில் தண்ணீர் உறைநிலைக்கு சென்று வருகிறது.

தேனி,

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் உறைபனி நிலவுவதால் வீட்டுமுன்பு நிறுத்தியிருக்கும் வாகனங்களின் மீது ஐஸ்கட்டிகள் படர்ந்து காணப்படுகிறது.

கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது நடைபயிற்சிக்கு செல்பவர்கள் மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு கோவிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் போடி அருகில் உள்ள மூணாறு செல்லும் சாலையில் சின்னகல்லாறு பகுதியில் தண்ணீர் உறைநிலைக்கு சென்று வருகிறது. பிரிட்ஜில் பீரிசரில் வைத்த ஐஸ்கட்டியை போல தண்ணீர் பாட்டிலில் பிடித்து வெளியில் வைக்கப்பட்ட தண்ணீர் மாறி வருகிறது.

இதனால் எப்போதும் குடிநீரை சுடவைத்தே குடிப்பதற்கும், மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாளுக்குநாள் அதிகரித்து வரும் உறைபனியால் பொதுமக்கள் மற்றும் அதிகாலையில் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


Next Story