பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம் - மத்திய மந்திரி தகவல்


பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம் - மத்திய மந்திரி தகவல்
x

பாஜக பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கூறியுள்ளார்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் மட்டும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தவில்லை என்றும், 10 மாநிலங்களில் சோதனை நடந்ததாகவும் மத்திய இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கூறி உள்ளார்.

ராமநாதபுரத்தில் பாஜக ஓ.பி.சி அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய சிறு குறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பாஜக பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.


Next Story