"3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத்தருவோம்" - ஆர்.எஸ். பாரதி சூளுரை


3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத்தருவோம் - ஆர்.எஸ். பாரதி சூளுரை
x

3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத்தருவோம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரைத்துள்ளார்.

சிவகங்கை,

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ராகுல்காந்தி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரசார் இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், "3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத்தருவோம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரைத்துள்ளார்.

சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ். பாரதி பேசுகையில்,

"ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதில் இருந்து பிரதமர் மோடியின் அழிவு காலம் ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் அவர்களே 24 மணி நேரத்திற்குள் ராகுல் காந்தியின் பதவி பறித்த நீங்கள்... 4 ஆண்டுகளாக மக்களவை துணை சபாநாயகர் தேர்தலை நடத்தவில்லையே.. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள். 4 வருடமாக நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் இல்லை. 3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்றுத்தருவோம்" என்று ஆர்.எஸ். பாரதி கூறினார்.




Next Story