நெசவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


நெசவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2023 9:30 AM IST (Updated: 6 Jun 2023 6:39 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் நெசவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வடக்கு கம்பம் வீதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 36), நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா (33). இருவருக்கும் திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சுபஸ்ரீ (13), சஞ்சய் கவுதம் (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக புவனேஸ்வரன் வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

பின்னர் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் அமுதா 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த புவனேஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து புவனேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story