கூடலூரில் புதிய வாரச்சந்தை; நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


கூடலூரில் புதிய வாரச்சந்தை; நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Jan 2023 10:14 PM IST (Updated: 10 Jan 2023 3:44 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் புதிய வாரச்சந்தை அமைக்கப்படும் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி

கூடலூர் நகராட்சி கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையாளர் காஞ்சனா முன்னிலை வகித்தார். இதில், துணைத்தலைவர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டம் 2022-23-ன்கீழ் கூடலூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் இல்லாத பகுதிகளில் ரூ.2 லட்சம் செலவில் புதிதாக குடிநீர் பகிர்மான குழாய் அமைப்பது, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருவிளக்குகளை பராமரிக்க மின் உதிரி பொருட்கள் வாங்குவது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கூடலூர் நகராட்சி 7-வது வார்டு பகுதியில் புதிய வாரச்சந்தை அமைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story