மின்சாரம் தாக்கி வெல்டர் பலி


மின்சாரம் தாக்கி வெல்டர் பலி
x

கபிலர்மலை அருகே மின்சாரம் தாக்கி வெல்டர் பலியானார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

வெல்டர்

திருவாரூர் மாவட்டம், கிடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விஜயராஜ் (வயது 24). இவருக்கு இ்ன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் திருச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான என்ஜினீயரிங் கம்பெனியில் இருந்து பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே வேட்டுவம்பாளையத்தில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு நெல் அரவை எந்திரத்தை பொருத்துவதற்காக கடந்த 3-ந் தேதி வந்துள்ளார்.

தொடர்ந்து 3 நாட்களாக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று முன்தினம் அரிசி ஆலையில் எந்திரத்தை பொருத்தும் பணியில் விஜயராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

மின்சாரம் தாக்கி பலி

பின்னர் அங்கிருந்தவர்கள் விஜயராஜை காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விஜயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story