வாகனம் மோதி வெல்டிங் தொழிலாளி சாவு


வாகனம் மோதி வெல்டிங் தொழிலாளி சாவு
x

வாகனம் மோதி வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்

நெல்லை மாவட்டம், நாங்குனேரி தாலுகா, ராஜபுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பிரவீன் (வயது 25). இவர் கடந்த சில நாட்களாக பெரம்பலூர் நான்கு ரோட்டில் ஒரு வீட்டில் தங்கியிருந்து வெல்டிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கனகராஜ் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பிரவீன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரவீன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பிரவீனின் தாய் ஜெயா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story