மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
x

தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி சில்வர்புரம் மாற்றுத்திறனாளிகள் காலனியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு அரிசி பைகளை வழங்கினார்.

அதேபோல் தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் முத்துநகர் பார்வையற்றோர் சமுதாய அறக்கட்டளையில் வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆனந்தசேகரன் ஏற்பாட்டின் பேரில் அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story