மக்கள் நேர்காணல் முகாமில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மக்கள் நேர்காணல் முகாமில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:47 PM GMT)

கட்டுமாவடி ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

கட்டுமாவடி ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மக்கள் நேர்காணல் முகாம்

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜமுனா ராணி தலைமை தாங்கினார். தாசில்தார் ரமேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், ரஜினிதேவி பாலதண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.

முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 40 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரத்து 700 மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.21 ஆயிரத்து 762 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 240 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.17 ஆயிரத்து 808 மதிப்பிலும் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 18 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜமுனா ராணி வழங்கினார்.

இதில் மண்டல துணை தாசில்தார் ஜெயசெல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன், வேளாண்மை உதவி அலுவலர் ஜாக்கீர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் நன்றி கூறினார்.


Next Story