பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 10:21 AM GMT)

திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

திருவாரூர்

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பட்டாமாறுதல், புதியகுடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 222 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் கொடுத்தனர்.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாாிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

அதனை தொடர்ந்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரமும், 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பேருக்கு தலா ரூ.17,000 வீதம் இயற்கை மரண நிவாரண உதவித்தொகைக்கான காசோலை ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனா மணி (மன்னார்குடி), தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் இராஜராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் சித்ரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறுதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story