மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்-மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்-மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:45 PM GMT)

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 322 மனுக்கள் பெறப்பட்டது.

அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.92,760 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story