நெல்லையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்


நெல்லையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி நெல்லையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி

நெல்லை மாநகர டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நெல்லையை அடுத்த தாழையூத்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்தது. நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் நாடார் தலைமை தாங்கினார். நாடார் உறவின்முறை சங்க செயலாளர் பன்னீர்செல்வம் நாடார், பொருளாளர் ராமச்சந்திரன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஷ் சவுந்தர் முருகன் சார்பில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாணவிக்கு கல்வி உதவித்தொகை, ஒருவருக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாநகர கவுரவ ஆலோசகர் மகாலிங்கம், மாநகர துணை தலைவர் மனோகர், மாவட்ட இணை செயலாளர் அய்யாசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை நாடார்உறவின்முறை சங்கத்தின் 61-வது பொதுக்குழு கூட்டமும் நடந்தது.



Next Story